ஆசிரியர்களுக்குரிய ஒழுக்க கோவை.
➡️ ஆசிரியர் தமது உடையில் பகட்டில்லாத தன்மையும் அவை பொருத்து தன்மையில் வெளிக்காட்டல் வேண்டும்.
➡️ ஆசிரியர் சொல்லாலும் செயலாலும் நேர்மையானவர் ஆதல் வேண்டும்.
➡️ சாதி,இனம், சமூக, அந்தஸ்து போன்ற எதையும் கருதாமல் மாணவரையும் நியாயமாகவும் சமமாகவும் கவனித்தல் வேண்டும்.
➡️ ஆசிரியர் தமது நடத்தையூடாக எல்லோரதும் கவனத்தையும், கௌரவத்தையும், மதிப்பையும் பெற வேண்டும்.
➡️ தொழிலுக்கு பங்கம் விளைவிக்கத்தக்க துர்பழக்கத்திலிருந்து ஆசிரியர் விலகி இருக்க வேண்டும்.
ஆசிரியர்களுக்குரிய சட்டதிட்டங்கள்.
➡️ குறிப்பிட்ட நேரத்திற்கு சமூகம் அளித்தல் வேண்டும்.
➡️ வருகை தந்தமைக்கான வரவு இடாப்பு புத்தகத்தில் வரவு ஒழுங்கு படி இக்கத்துடன் கையொப்பமிடுதல் வேண்டும்.
➡️9.00 மணிக்குள் மாணவர் வரவினை வரவு இடாப்பில் குறித்தல் வேண்டும்.
➡️ பிந்தி வரும் ஆசிரியர்கள் சரியானதும் உண்மையானதும் காரணத்தை குறிப்பிட வேண்டும்.
➡️ முன்னறிவித்தல் *
(அதிபரின் அனுமதியுடன்) பதில் கடமை ஏற்பாட்டுடன் லீவு விண்ணப்பம் கொடுத்து லீவு பெறுதல் வேண்டும்.
➡️ குறுகிய கால லீவு பெறுவோர் அதற்குரிய புத்தகத்தில் கையொப்பமிட்டு செல்ல வேண்டும்.
➡️ பாடசாலை முடிவடையும்போது மாணவர் அனைவரும் சென்ற பின்னர் வரவு ஒழுங்கு படி இலக்கத்துடன் கையொப்பமிட்டு செல்ல வேண்டும்.
➡️ பெற்றார் ஆசிரியர் சங்க கூட்டங்களில் பங்கேற்றல் வேண்டும்.
➡️ இணை பாடவிதான செயல்பாடுகளில் பங்கேற்று வேண்டும்.